மதுரை மீனாட்சி அம்மனை தரிசிப்பதற்கும் இந்தியாவில் வாழும் இந்து மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தியும் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மங்கல்ராஜ் சாகு மிதிவண்டியிலேயே பயணம் மேற்கொண்டு மதுரை வந்தார். பொதுமக்கள் அவருக்கு தேநீர் மற்றும் உணவு வழங்கி உபசரித்தனர்.
சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த மீன் பாடி வண்டி (ட்ரை சைக்கிள்) ஓட்டும் 55 வயதான தொழிலாளி மங்கல்ராஜ் சாஹீவா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ஆம் தேதி தனது சொந்த மாநிலமான சட்டீஸ்கரில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரத்திற்கு மிதிவண்டியிலேயே புறப்பட்டு யாத்திரையாக வந்துள்ளார்.
அவரது பயணத்தில் புண்ணிய ஸ்தலமான ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் தரிசனத்தை முடித்துக் கொண்ட மங்கல்ராம், மீண்டும் சட்டீஸ்கர் செல்லும் வழியில் இன்று மீனாட்சியம்மனைத் தரிசிப்பதற்காக மதுரைக்கு வருகை தந்தார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில் "கடந்த டிசம்பர் 21 ஆம் தேதியை தனது பயணத்தை தொடங்கிய அவர் தற்போது ராமேஸ்வரம் கன்னியாகுமரி பயணத்தை நிறைவு செய்துவிட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
இதற்கு முன்பு அயோத்தி வாரணாசி கத்ரா போன்ற இடங்களுக்கு இரண்டு முறை யாத்திரை மேற்கொண்டு உள்ளதாகவும் இது தன்னுடைய மூன்றாவது யாத்திரை என தெரிவித்தார். இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும். உலகத்தின் நலனும் மிக முக்கியம். அதை வலியுறுத்தியே இந்த யாத்திரையை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.