/indian-express-tamil/media/media_files/2025/10/27/anbil-mahesh-2025-10-27-14-06-40.jpg)
வடகிழக்கு பருவமழையை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. அதேபோல் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. காவிரியில் வரும் உபரி நீர் முக்கொம்பு மேலணையிலிருந்து மாயனூர் கம்மாய் வழியாக உய்யக்கொண்டான் வாய்க்கால் வழியாக, திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட எல்லை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றடைகிறது.
உய்யக்கொண்டான் வடிகால் நீரானது திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் ஊராட்சி பூசத்துறை இடையே உள்ள குவளை வாய்க்காலில் கலந்து வெளியேற்றப்படுகிறது. இந்த குவளை வாய்க்காலை நம்பி வேங்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 300 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், குவளை வாய்க்காலில் ஆகாயத்தாமரை அகற்றப்படாமலும், மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி குவளைவாய்க்காலை பார்வையிட்டதுடன், ஆகாயத்தாமரை உடனடியாக அகற்றி துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாநிதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வேங்கூர் கிராம மக்கள் விவசாயிகள் என ஏராளமான உடன் இருந்தனர். முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேங்கூர் பகுதி மக்கள் குவளை வாய்க்காலை தூர்வாரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us