34% அதிகம் பெய்த வடகிழக்கு பருவமழை,காரணம் என்ன? விளக்கம் கூறியுள்ள வானிலை மையம்

எப்போதையும் விட இந்த ஆண்டு 34% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாகவும் இதனால் சென்னை உள்பட வடதமிழக மாவட்டங்கள் நீரில் மூழ்கியதாகவும் இதற்கான காரணம் குறித்தும் வானிலை மையம் கூறியுள்ளது.

எப்போதையும் விட இந்த ஆண்டு 34% அதிகமாக வடகிழக்கு பருவமழை பெய்துள்ளதாகவும் இதனால் சென்னை உள்பட வடதமிழக மாவட்டங்கள் நீரில் மூழ்கியதாகவும் இதற்கான காரணம் குறித்தும் வானிலை மையம் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
தமிழகத்தில் இன்று மழை தொடர வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அதிக மழை தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழையால் சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை இயல்பை காட்டிலும் 34% அதிகம் பெய்தது தான் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதோடு சென்னை உள்பட வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் எவ்வளவு சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் உள்ள நிலையில் கடந்த அக்டோபரில் தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அவ்வப்போது கனமழை பெய்தது.

இந்த மாதம் ஃபீஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் சென்னையை விட கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன. இதற்கு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்தது தான் முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Advertisment
Advertisements

இந்நிலையில் தான் தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நேற்று வரை டிசம்பர் 21 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 21 வரை சராசரியாக 42 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் நேற்று வரை 15 செமீ அதிகமாக 57 செமீ வரை மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 34 சதவீதம் வரை அதிகம் பெய்துள்ளதாக கூறியுள்ளது. 

குறிப்பாக வடதமிழக உள்மாவட்டங்களில் நல்ல மழை பதிவாகி உள்ளதாகவும் மாவட்ட வாரியாக பார்த்தால் திருப்பத்தூரில் 89% , கிருஷ்ணகிரியில் 80%, விழுப்புரத்தில் 70% திருநெல்வேலியில் 64%, தர்மபுரி மற்றும் சேலத்தில் 60 %, கோவையில் 53%, திருவண்ணாமலையில் 51% வரை இயல்பை விட அதிக மழை பதிவாகி உள்ளது.

மேலும் தலைநகர் சென்னையை பொறுத்தவரை அக்டோபர் 1 முதல் நேற்று வரை இயல்பை விட மொத்தம் 33% வரை மழை அதிகரித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் வழக்கமாக சென்னையில் 77 செமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் 102 செமீ மழை பெய்துள்ளது.

அதாவது சென்னையில் நேற்று வரையிலான வடகிழக்கு பருவமழை என்பது இயல்பை விட 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Rains Chennai Weather Report

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: