வடகிழக்குப் பருவமழை தீவிரம்: கோவை நொய்யல் ஆற்றில் கரைபுரளும் வெள்ளம்!

கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்ததால், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு முழுவதுமாக நிரம்பியுள்ளது.

கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்ததால், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு முழுவதுமாக நிரம்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore Rains

Coimbatore

கோவை | அக்டோபர் 21, 2025

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை (Northeast Monsoon) தீவிரம் அடையத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்கு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கோவையில் உள்ள நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

Advertisment

அரபிக்கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.இத்துடன், குமரிக்கடல் ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இந்தச் சூழல்களால், தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை நொய்யலில் வெள்ளப் பெருக்கு

Coimbatore Rains

கடந்த சில நாட்களாகக் கோவையில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், குனியமுத்தூர் பகுதியில் உள்ள சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு முழுவதுமாக நிரம்பியுள்ளது.

Advertisment
Advertisements

அணைக்கட்டு நிரம்பியதால், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தக் காட்சி விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: