/tamil-ie/media/media_files/uploads/2018/10/d558.jpg)
வடகிழக்கு பருவ மழை, பாலச்சந்திரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். வங்க கடலில் நிலவும் வளி மண்டலம் மேலடுக்கு வலுப்பெற்று, வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கும் .
வங்கக் கடலில் மீனவர்கள் 12 மணி நேரத்திற்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலில் காற்று 35 கி.மீ. வேகத்துக்கு மேல் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம்" என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.