மைக் சின்னத்துக்கு பதிலாக வேறு சின்னத்தை ஒதுக்க கோரிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சீனாமின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கியது. மைக் சின்னத்திற்கு பதிலாக படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் தான் என சீமான் வைத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“