ரூ.60 லட்சம் வரி பாக்கி: சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏவின் 2 தியேட்டர்களுக்கு சீல்

சென்னை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாத 2 தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை

author-image
WebDesk
New Update
Thear

சென்னை நங்கநல்லூரில் முன்னாள் எம்.எல்.ஏவுக்கு சொந்தமான 2  தியேட்டர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று (செப்.19) சீல் வைத்தனர். சென்னை நங்கநல்லூர் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிவேல் மற்றும் வேலன் திரையரங்குகள் செயல்பட்டு வந்தது. 

Advertisment

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் வரி உயர்த்தியிருந்த நிலையில் இரு திரையரங்கு சார்பில் வரி அதிகமாக இருப்பதாக கூறி கட்ட இயலாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் வரி கட்ட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இரு திரையரங்குகளும் 6 ஆண்டுகளாக வரி கட்டாமல் ரூ.60 லட்சம் நிலுவையில் வைத்துள்ளனர். வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை திரையரங்குகளுக்கு வரி கட்ட சொல்லி நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் திரையரங்கு தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் தற்போது சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.   

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல அதிகாரிகள் இன்று இரண்டு திரையரங்குகளுக்கும் சென்று அங்கிருந்த ஆட்களை வெளியேற்றி மின்சார இணைப்புகளைத் துண்டித்துள்ளனர்.மேலும் இரண்டு திரையரங்குகளின் முகப்புகளுக்கும் சீல் வைத்து பூட்டிச் சென்றனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“we

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: