/indian-express-tamil/media/media_files/4a3TA4MSxw8fBw6iWnxF.jpg)
டோக்கன் பெறத் தவறியவர்கள், வருகின்ற 13 மற்றும் 14ம் தேதி நியாய விலைகடைகளில் 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பைபெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எல்லா ஆண்டும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்குரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில்பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக ரேசன் கடைகளில் பொங்கல் பண்டிக்கை முன்னதாக பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன்பரிசாக ரூ. 1000 ரொக்கம்வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்துள்ளது.
இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்திற்காக கடந்த ஜனவரி 7ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்பட்டன. மேலும் நேற்று முதல் ஜனவரி 13ம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நோரத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பை குடும்பஅட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பை 13ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14ம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ரோக்கன் கிடைக்கப்பெறாத அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகையை ஜனவரி 13 மற்றும் 14ம் தேதிகளில் நியாய விலை கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.