புழல் சிறையில் ரவுடி கொலை: 4 காவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது சிறைத்துறை

புழல் சிறையில் பிரபல ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 4 காவலர்களுக்கு சிறைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புழல் சிறையில் பிரபல ரவுடி பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 4 காவலர்களுக்கு சிறைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prisoner Murder In Puzhal Prison

Prisoner Murder In Puzhal Prison

சென்னை புழல் சிறையில் பாக்சர் முரளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 காவலர்களுக்கு விளக்கம் கேட்டு சிறைத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

சென்னை புழல் மத்திய சிறையில் கடந்த 20-ஆம் தேதி பிரபல ரவுடி பாக்சர் முரளி 5 கைதிகளால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி, உதவி ஜெயிலர் பழனிவேல், முதன்மை தலைமை காவலர் நாகராஜன் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சம்பவத்தின்போது பணியில் இருந்த தலைமை வார்டன்கள் சுப்பிரமணி, செந்தில் ஆகியோருக்கும், காவலர்கள் கணேஷ், ஹரிபிரசாத் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு சிறைத்துறை டிஐஜி முருகேசன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த கைதிகள் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: