Advertisment

சமூக நீதி தளத்தில்… பிரதமர் ரேஸில் ஸ்டாலின்

காங்கிரஸால் காலியான தேசிய அரங்கில் இடத்தை நிரப்ப மாநிலங்கள் முழுவதிலும் உள்ள பிராந்திய தலைவர்கள் போட்டியிடும் நிலையில், ஸ்டாலினும் போட்டியில் களம் இறங்கியுள்ளார்

author-image
WebDesk
New Update
சமூக நீதி தளத்தில்… பிரதமர் ரேஸில் ஸ்டாலின்

Janardhan Koushik 

Advertisment

Now, Stalin as ‘PM material’, riding ‘social justice’ pitch: ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள்” பிரதிநிதித்துவத்துடன் ‘சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு’ தொடங்க உள்ளதாக அறிவித்தார். சமூக நீதியைத் தேடுவதோடு, கூட்டாட்சியை அடைவதும் கூட்டமைப்பின் குறிக்கோளாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, சமூகப் புரட்சிக் கூட்டணி, பூலே-அம்பேத்காரி கவுரவ்ஷாலி அவுர் ஆதர்ஷவாதி முஹிம், மற்றும் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (அல்லது BAMCEF) போன்ற அமைப்புகளின் கீழ் தேசிய வலைதளத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.

“அனைவருக்கும் அனைத்தும் என்பதே இந்தக் கூட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். அடிக்கடி சந்தித்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறிய ஸ்டாலின், திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசு சமூக நீதி என்றும் கூறினார்.

கூட்டமைப்பின் அறப்போராட்ட நோக்கங்கள் ஒருபுறமிருக்க, இச்சந்திப்பின் தெளிவான செய்திகளில் ஒன்று, அத்தகைய முன்னணியை வழிநடத்தும் இயல்பான கட்சி திமுகதான் என்பதுதான். காங்கிரஸால் காலியான தேசிய அரங்கில் இடத்தை நிரப்ப மாநிலங்கள் முழுவதும் உள்ள பிராந்திய தலைவர்கள் போட்டியிடும் நிலையில், ஸ்டாலினும் போட்டியில் களம் இறங்குகிறார். திமுக தலைவர் ஒருவர் ஸ்டாலினை "ஒரு தவிர்க்க முடியாத தலைவர்" என்றும் "பிரதமருக்கான தகுதியுடையவர்" என்றும் கூறினார்.

கூட்டத்தில், மாநில இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான போராட்டம் குறித்து ஸ்டாலின் பேசியதாவது: இதற்கு திமுக மகத்தான பங்களிப்பை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். 2020 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது, 2021 ஜூலையில்தான் பாஜக அரசு இதை ஏற்றுக்கொண்டது.

திராவிடப் பேரறிஞர் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகளை மேற்கோள் காட்டி, திமுக அரசுகளின் இத்தகைய "மக்கள் நல" நடவடிக்கைகளை ஸ்டாலின் பட்டியலிட்டார்.

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் திமுக சார்பில் ஆஜரான ராஜ்யசபா எம்பியும் மூத்த வழக்கறிஞருமான பி வில்சன், “அனைவருக்கும் அனைத்தும் என்கிற திராவிட சித்தாந்தம்” இந்தியா முழுவதும் சென்றடைய வேண்டும் என்றார்.

"சமூக நீதிக்கான அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது... நமது தளபதி (ஸ்டாலின்) அவரது தந்தை மற்றும் பிற திராவிடத் தலைவர்களைப் போலவே இருக்கிறார் ... இன்று, வடகிழக்கு மாணவர்கள் கூட நமது OBC ஒதுக்கீட்டு போராட்டத்தின் பலனைப் பெறப் போகிறார்.... நமது முதலமைச்சரின் போராட்டத்தல் ஒட்டுமொத்த நாடும் பயனடையும். ஸ்டாலின் தவிர்க்க முடியாத தலைவராகிவிட்டார். அவர் பிரதமருக்கான தகுதியுடையவர் என்று நான் கூறுவேன்,” என்றார்.

திமுக அதன் சமூக நீதி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மற்ற மாநிலங்களுக்குச் செல்ல நினைக்கிறதா என்று கேட்டதற்கு, வில்சன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எதுவும் சாத்தியம். நமக்கு (எச்.டி) தேவகவுடா பிரதமராக இருந்துள்ளார், அதனால் ஏன் முடியாது? என்று கூறினார்.

ஸ்டாலினின் ஆடுகளம் பாஜகவின் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் பின்னணியில் வருகிறது, பாஜக கட்சி அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. பிராந்திய பெருமை மற்றும் மற்ற உணர்வுகள் மேலெழும்பிய மாநிலம் இதுவரை பாஜகவின் கவர்ச்சியை எதிர்க்கிறது.

காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான எஸ் பீட்டர் அல்போன்ஸ், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் முன்னெப்போதையும் விட தேவை என்று கூறினார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

“பாஜக இந்திய அரசியல் தளத்தில் மதப் பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. சில தலைவர்கள் இந்த போக்கை எதிர்த்துப் போராட முடியும், ஸ்டாலின் அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று அல்போன்ஸ் கூறினார், பாஜகவை எதிர்கொள்வதன் மூலம் இந்து வாக்குகளை அந்நியப்படுத்தும் "ஆபத்தில் திமுக தலைவர்" இருக்கிறார் என்று கூறினார். "சமூகப் பிரச்சனைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவ்வாறு செயல்படும் முதல்வர்கள் மிகக் குறைவு." என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலினின் செய்தியில் ஆர்வமுள்ளவர்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்களும் இருப்பதாக அல்போன்ஸ் கூறினார், மேலும் அவரது கருத்துகளை சமூக ஊடகங்களில் அந்த இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். "ஸ்டாலின் வட இந்தியாவில் இருந்து இளைஞர்களின் கற்பனையை கவர்ந்துள்ளார்." என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்த ஸ்டாலின், இனி இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்படுவர் என்று அறிவித்து, 2007-08 முதல் நிலுவையில் உள்ள அனைத்து சாதியினரின் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் 208 நியமனங்களின் ஒரு பகுதியாக ஒரு பெண் ஓதுவாருக்கு (தெய்வத்தின் முன் துதி பாடுபவர்) பணி நியமனக் கடிதத்தை நேரில் வழங்கினார். (கருணாநிதி ஆட்சியில் தொடங்கப்பட்ட ஒரு திட்டம், அதிமுக ஆட்சியில் இது முற்றிலும் நிறுத்தப்பட்டது.)

பாஜக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசுகையில், 'ஓபிசி இனத்தைச் சேர்ந்த மோடி பிரதமராக வந்ததன் மூலம் சமூக நீதிக்கு முன்னுதாரணமாக பாஜக திகழ்கிறது. “சமூக நீதி இயக்கத்தை திமுக கொண்டாட வேண்டுமானால், திமுக பிரதமர் மோடியைக் கொண்டாட வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது, ​​பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு என்ன செய்தார்கள்? என்று கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Mk Stalin Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment