/indian-express-tamil/media/media_files/64mavf7y3Zan1x1kNpIo.jpg)
arrest
பணி நிரந்தரம் செய்வது, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்களை போலீசார் கைது செய்தனர்.
எம்.ஆர்.பி தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தரப் பணியிடங்களை உருவாக்குவது, ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்குவது உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். சுமார் 500 செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல்துறையினர் வலுகட்டாயமாக கைது செய்தனர்.
ஏற்கனவே சென்னை டி.பி.ஐ வளாகத்தில் சம ஊதியம் வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்களை போலிசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us