/tamil-ie/media/media_files/uploads/2023/02/OPS-Mother.jpg)
ஓ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் காலமானார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள். 96 வயதான இவர், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் அவரின் உயிர் இன்று (பிப்.24) இரவு பிரிந்தது. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று பழனியம்மாளின் உயிர் பிரிந்துள்ளது.
ஓ.பன்னீர் செல்வம் தற்போது சென்னையில் உள்ளார். இந்நிலையில் அவர் தேனி பெரியகுளம் சென்று தனது தாயார் உடலை பார்க்க உள்ளார்.
ஒ. பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.