Advertisment

இறைவன் தரும் சின்னத்தில் போட்டி; இவர்தான் அடுத்த பிரதமர்: ஓ.பி.எஸ் அதிரடி

நாட்டை 10 ஆண்டுகள் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக ஆண்டுள்ளார்; அவர்தான் அடுத்தும் பிரதமராக வர வேண்டும். அதிமுகவில் உள்ளவர்களும், எடப்பாடி ஆதரவில் உள்ளவர்களும் என்னிடம் பேசிவருகின்றனர் என முன்னாள முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கூறினார்.

author-image
WebDesk
New Update
OPS Kovai press meet

வரும் மக்களவைத் தேர்தலில் இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

o-panneerselvam | முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் திருச்சியில் இன்று (ஜன.10,2024) செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும்” எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவில் உள்ளவர்கள் தன்னிடம் பேசிவருகின்றனர். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்க வேண்டும்” என்றார்.

Advertisment

தொடர்ந்து, தேர்தலில் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு, “இறைவன் தரும் சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரலில் நடக்க உள்ளது. இந்தத் தேர்தலை அதிமுக, பாஜக கட்சிகள் தனித்து சந்திக்க உள்ளன.

காங்கிரஸ், திமுக கூட்டணி வலுவாக உள்ளது. இந்த நிலையில் ஓ. பன்னீர் செல்வம் பாஜகவுக்கு ஆதரவு அளித்துள்ளார். பா.ம.க., தே.மு.தி.க, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் தங்களின் ஆதரவை தெரிவிக்கவில்லை.

இடதுசாரிகள் (மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளி்டட கட்சிகள் திமுக காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

O Panneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment