Advertisment

'நான் உங்களுக்கு உறுதி கூற விரும்புகிறேன்..!' மோடிக்கு ஓ.பி.எஸ் பரபரப்பு கடிதம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
O Panneer Selvams letter to Prime Minister Narendra Modi

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா பெற்ற வெற்றி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “குஜராத் சட்டமன்ற தேர்தலில் தொடர்ந்து 7ஆவது முறையாக, வரலாற்று சிறப்புமிக்க 150 தொகுதிகளுக்கு மேலான வெற்றியை பதிவு செய்துள்ளீர்கள்.

உங்களுக்கு என் வாழ்த்துகள் என்று கட்சியின் ஆதரவை உங்களுக்கு வழங்க உறுதியளிக்க விரும்புகிறேன்.

மக்களின் நலனுக்காக உங்களுடன் இணைந்து முன்னோக்கி பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா, 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சொற்ப தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆம் ஆத்மிக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment