எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பீர்களா? 6 வழக்குகளைக் குறிப்பிட்ட ஓ.பி.எஸ்

அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும், அதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும், அதற்காக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
OPS press meet

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பது குறித்து நீதிமன்ற வழக்குகளின் தீர்ப்புகளைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: “அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது. அது எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் முழு மனதுடன் வரவேற்பேன். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேற கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கட்சியின் இணைப்பு குறித்து என்னைப் பொறுத்தவரை நான் எந்த நிபந்தனையையும் முன்வைக்கவில்லை” என்று கூறினார்.

Advertisment

இ.பி.எஸ் உடனான பிரச்னை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இ.பி.எஸ் உடனான பிரச்னைகள் குறித்து என்னிடம் கேட்காமல் அவரிடமே கேளுங்கள். அரசியல் சூழலில் எதிரியும் இல்லை, நண்பர்களும் இல்லை. எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று கூறினார்.

செங்கோட்டையன் முயற்சி குறித்த கேள்விக்கு பதிலத்த ஓ.பி.எஸ், “அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க செங்கோட்டையன் முயற்சி செய்து வருகிறார், அது வெற்றி பெற எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்தார். மேலும், டெல்லியில் இருந்து தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்று ஓ.பி.எஸ் கூறினார்.

கட்சி இணைந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், “பல பிரச்னைகள் பேசப்பட வேண்டியுள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 6 வழக்குகள் எங்களின் தர்மயுத்தத்தின் அடிப்படையாகும். அந்த வழக்குகள் நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்” என்று கூறினார்.

Advertisment
Advertisements
O Panneerselvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: