scorecardresearch

மீண்டும் சிக்கலில் ஓ.பி.எஸ்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

ஓ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ops

ஓ.பி.எஸ் மேல்முறையீடு வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுகவில் சென்ற ஆண்டு முதல் இரட்டை தலைமை சிக்கல் தொடர்ந்து வருகிறது. சென்ற ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அதில் ஓ.பி,எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கும் சேர்த்துக்கொள்ளபட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித் தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தார். பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்புக்கு எதிராக உடனடியாக ஓ.பி.எஸ் தரப்பு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை 2 நாட்களுக்கு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டது. மார்ச் 31-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இறுதி விசாரணைக்காக இந்த வழக்கு ஏப்ரல் 3-க்கும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான ஆவணங்களையும் இரு தரப்பு சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக், தனிநீதிபதி தீர்ப்புக்கு  எதிராக இடைக்கால உத்தரவு பிறபிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: O panneerselvam appeal case hearing today admk

Best of Express