/tamil-ie/media/media_files/uploads/2023/04/opo.jpg)
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என்று ஓ.பி.எஸ் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.
அதிமுகவில் கிட்டதட்ட கடந்த ஒரு ஆண்டாக ஒற்றை தலைமை சிக்கல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. இந்நிலையில் இந்த பொதுக்குழுவில், ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். மேலும் அதிமுகவின் பொதுச் செயலாளராக இ.பி.எஸ் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராகவும் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பாளித்தது. தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அமர்வு, ஓ.பி.எஸ் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த மனு விசரணையில் உள்ளது.
இந்நிலையில் தன்னை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் இ.பி.எஸ் வழக்கு தொடர்ந்தார். இதில், அதிமுகவின் திருத்தப்பட்ட கட்சி விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து, 10 நாட்களுக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் மனு அளித்துள்ளார். ” அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான் தான்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றம் விதித்திருந்த 10 நாள் கெடு, வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில் ஓ.பி.எஸ் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.