சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஓ.பி.எஸ்: செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்.

author-image
WebDesk
New Update
OPS treatment

கோவையில், ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

Advertisment

கோவையில், கணபதி பகுதியில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற ஓ. பன்னீர்செல்வம், அந்த இடத்தில் தங்கி சிகிச்சை பெற்றார்.

இந்த மையத்தில் நீராவி குளியல், நேச்சுரோபதி, பிசியோதெரபி, யோகா, அக்குபஞ்சர், சிறப்பு தெரபி சிகிச்சைகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த சூழலில் தனது சிகிச்சைகளை முடித்துக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போது வீடு திரும்பினார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் நலம் விசாரித்தனர்.

 

Advertisment
Advertisements

OPS treatment 1

 

இந்நிலையில், சிகிச்சை முடிந்து வெளியே வந்த ஓ. பன்னீர்செல்வத்திடம் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையே அமைக்கப்பட்டுள்ள கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறி விட்டு, ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.

O Panneerselvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: