Advertisment

ஒடிசா ரயில் விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 137 பயணிகள் பத்திரமாக மீட்பு, 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

மாநில அரசின் தகவல்படி, தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர்.

author-image
WebDesk
New Update
Odisha train accident

Odisha train accident

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸில் தமிழகத்தைச் சேர்ந்த 137 பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மாநில அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisment

நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ஒடிசா சென்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை திரும்பினார்கள்.

தமிழகத்தை சேர்ந்த பயணிகள் பாதுகாப்பாக இருப்பதாக உதயநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிறகு அமைச்சர்கள் இருவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஒடிசாவில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்து விளக்கினர்.

மாநில அரசின் தகவல்படி, தமிழகத்தைச் சேர்ந்த 137 பேர் சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை, மாநில அரசு 119 பேருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. எட்டு பேரை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஆனால் மாலையில், எட்டு பேரும் பத்திரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒடிசா அரசு உதவி எண்கள் அறிவித்தது. கால் சென்டரில் விசாரித்தபோது, ​​தமிழகத்தில் இருந்து காணாமல் போனவர்களின் அழைப்புகள் வரவில்லை. நாங்கள் பிணவறைகளுக்குச் சென்று சோதனை செய்தோம், ஆனால் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் யாரும் இறக்கவில்லை, என்று உதயநிதி கூறினார்.

காணாமல் போன எட்டு பேரில் நரகனி கோபி, ஜெகதீசன் ஆகியோரிடம் பேசி அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்தோம்.

மீதமுள்ள அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகியோரும் பத்திரமாக உள்ளதாக அவர்களுடன் பயணித்த சக பயணிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஒடிசாவில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர்கள் பயணித்த பி3, பி4, பி7, பி9, எஸ்1 மற்றும் எஸ்2 போன்ற பெட்டிகள் விபத்தில் சேதம் அடையவில்லை என்று உதயநிதி கூறினார்.

முன்னதாக சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்த பயணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர்.

ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: சிறப்பு ரயிலில் பயணம் செய்த 137 பேரில், மூவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை 294 பேர் ரயிலில் ஏறியிருந்தாலும், அவர்களில் 137 பேர் சென்னைக்கு வந்ததாக சுப்பிரமணியன் கூறினார். பலர் வெவ்வேறு ரயில் நிலையங்களில் இறங்கினர்.

இருப்பினும், மருத்துவமனை டீன் டாக்டர் இ தேரனிராஜன், நான்கு பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், மூன்று பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறினார். காசிமேட்டைச் சேர்ந்த தரணி என்ற ஒருவருக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டது, ஆனால் அவரும் பாதுகாப்பாக இருந்தார். அவர் சுய நினைவுடன், நிலையாக இருக்கிறார். அவர் குறைந்தது 24 மணிநேரம் கண்காணிப்பில் இருப்பார், என்று தேரனிராஜன் கூறினார்.

சென்னை சென்ட்ரலில் உள்ள பிளாட்பாரம் எண் 11ல், ஸ்ட்ரெச்சர்கள், சக்கர நாற்காலிகள், கிராஷ் வண்டிகள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் கொண்ட ஆறு குழுக்கள் காத்திருந்தன.

காயங்களுடன் எட்டு பேர் ஒடிசாவிலிருந்து ரயிலில் ஏறுவதாக மாநில அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் 25 பேர் சிறு காயங்கள் மற்றும் உடல் நலக்குறைவுக்காக உதவி கோரினர்.

சில நோயாளிகள் எக்ஸ்ரே மற்றும் பிற பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பயணிகள் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சிலர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அரசுப் போக்குவரத்துத் துறையின் 7 பேருந்துகளும், மாநில காவல் துறையின் 50 டாக்சிகளும் பயணிகளை அவர்களது இருப்பிடங்களுக்கு ஏற்றிச் செல்ல தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment