/indian-express-tamil/media/media_files/iWSjwzA0pGIrWvY6WqlH.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்று கூறுவது தவறு என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
ஆம்னி பேருந்துகள் எங்கிருந்து இயங்குவது என்பதில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்திற்கும், தமிழக அரசுக்கும் இடையில் கடந்த சிலநாட்களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்தன.
தைப்பூசம், குடியரசு தினவிழாவை தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகளில் ஏராளாமன பயணிகள் முன்பதிவு செய்திருந்தார்கள்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கபட்டத்தில் அரசு பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் வரை ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல் கோயம்பேட்டில்இருந்து இயக்கப்பட்டது. பொங்கலுக்கு பின்னரும் அங்கிருந்து இயக்கப்பட்டு வந்தது.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் சேகர் பாபு, ”பொங்கல் முடிந்தவுடன் கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகளை இயக்குவோம் என்றார்கள். கோயம்பேட்டில் 1000 பேருந்துகள் நிறுத்தும் வசதி உள்ளதா?. நாங்கள் கோயம்பேட்டிலிருந்து தான் இயக்குவோம் என்றால் என்ன அர்த்தம்?. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வசதிகள் இல்லை என்பது தவறு . ஆம்னி பேருந்துகளுக்காக 5 நடைமேடைகள் உள்ளது. 77 பேருந்துகளை நிறுத்த முடியும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே திட்டமிட்டப்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் ” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து இயக்கப்பட்ட 217 ஆம்னி பேருந்துகள்கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. 145-க்கும் மேற்பட்ட ஆம்னிபேருந்துகள் பார்க்கிங் பேவிலும், இதர ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளும் நிறுத்தப்பட்டுள்ளது. ரெட் ஹில்ஸ் மற்றும் பூந்தமல்லி வழியாக செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகள் மட்டுமேகோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.