/indian-express-tamil/media/media_files/yRHFvQlGtGikeSzL2i1F.jpg)
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று விடுமுறை முடியும் நிலையில் அனைவரும் சென்னை திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள்இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதிக கட்டணம்வசூல் எனக்கூறி சிறை பிடிக்கப்பட்ட120 ஆம்னிபேருந்துகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம்இல்லாதபோதிலும்பயணிகளை பாதிக்காத வண்ணம்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் ஆம்னி பேருந்துகள்கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை முடிந்து ஊர் திரும்ப 1 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளநிலையில்இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால்ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.