Advertisment

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்

போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்பது உண்மை- அமைச்சர் சிவசங்கர்

author-image
WebDesk
New Update
TN Omni Bus Owners Association secretary Maaran press meet Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் பணிமனையை இன்று (ஜன.23) திறந்து வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில், "போக்குவரத்து ஊழியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்று போக்குவரத்து சங்கங்கள் கூறுவது 

உண்மை தான். அதற்கு தான் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் சிலர் இன்றே ஓட்டுநரை பணிக்கு எடுத்து விடலாம் என கூறுகின்றனர். தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய சில நாட்கள் ஆகும்" என்றார்.

Advertisment

தொடர்ந்து பேசிய அவர், "எஸ்.இ.டி.சி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் போது ஆம்னி பேருந்துகளும் அங்கிருந்து தான் இயக்க வேண்டும்.  போக்குவரத்து ஊழியர்களுக்கு 96 மாதம் அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார். ஆனால் அது அவரின் ஆட்சியில் நிறுத்தப்பட்டது என்று ஏன் அவருக்கு தெரியவில்லை? 

நிதி நிலை காரணமாக பல திட்டம் கொண்டு வர முடியவில்லை, அதற்கு காரணம்  ஒன்றிய அரசு நமக்கு சேர வேண்டிய நிதியை கொடுக்காமல் இருக்கிறது" என்றார். 

முன்னதாக கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதையடுத்து சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வெளியூர்களுக்கு செல்லும் அரசின் எஸ்.இ.டி.சி பேருந்துகள் அங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தனியார் ஆம்னி பேருந்துகள் இன்னும் கோயம்பேட்டில் இருந்து தான் இயக்கப்பட்டு வருகின்றன. 

ஜனவரி 24-ம் தேதியில் இருந்து ஆம்னி பேருந்துகள்  கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்து. ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இட வசதி இல்லை என்றும் சென்னை நகருக்குள் இருந்து  கிளாம்பாக்கம் வர பயணிகளுக்கு ரயில் வசதி,  பேருந்து வசதி முழுமையாக இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும். அரசு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தந்த பின் கிளாம்பாக்கத்தில்  பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், அமைச்சர் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என மீண்டும் கூறியுள்ளது பயணிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

    Bus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment