/indian-express-tamil/media/media_files/Hwyz0e2spqNTeRUqN0cd.jpg)
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் வேண்டும் என ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும்.
ஜன.24ஆம் தேதிக்கு பின்னர் ஆம்னி பேருந்துகள் முடிச்சூரை தாண்டக் கூடாது என்றெல்லாம் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்படும்வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில், சுமார் 88.52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள் மற்றும் 85 ஆம்னி பஸ்கள் நிறுத்தும் வசதிகள் உள்ளது. தினமும் 2,310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 260 கார்கள், 568 பைக்குகள் நிறுத்தும் வகையில் முதல்தளமும், 84 கார்கள், 2230 பைக்குகள் நிறுத்தும் வகையில் 2வது தளமும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.