தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக கருணாநிதி இருந்த காலகட்டத்தில், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆக அவரின் மகன் மு.க. ஸ்டாலின் இருந்தார். எனினும் அப்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அந்த வகையில் கருணாநிதி, மு.க. ஸ்டாலினுக்கு முதலில் கொடுத்த பதவி சென்னை மேயர்தான். அதன்பின்னர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பின்னர்தான் அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டன.
ஆனால் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு மூன்று ஆண்டுகளில் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. இது சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
இதனை திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகளே எதிர்பார்க்கவில்லை போல் உள்ளது. ஏனெனில் குமரி மாவட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், “உதயநிதிக்கு முதலில் சென்னை மேயர் பதவிதான் கொடுக்கப்படும்” என நினைத்துள்ளார்கள்.
இதனை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், சிலர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகன் என்ற ஒற்றைத் தகுதி அவரிடம் உள்ளது” எனத் தெரிவித்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/