Advertisment

தேனி: தொழிலாளியை சுட்டுக்கொன்ற வன அதிகாரி.. நள்ளிரவில் பயங்கரம்

தேனி கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக காட்டுக்குள் நுழைந்த விவசாய தொழிலாளியை வன அதிகாரி ஒருவர் சுட்டுகொன்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

author-image
WebDesk
New Update
பள்ளி முதல்வரை சுட்டுக் கொன்றதாக 12-ஆம் வகுப்பு மாணவன் கைது

வன அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர் கம்பம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் ஆவார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளகவுண்டன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்.
இவர் சனிக்கிழமை (அக்.28) இரவு கூடலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட காட்டுப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

Advertisment

அப்போது அங்கு ரோந்துப் பணியில் இருந்த வன அதிகாரி ஈஸ்வரனை எச்சரித்துள்ளார். இந்த இடத்தில் அனுமதி இன்றி உள்ளே நுழையோ, வேட்டையாடவோ அனுமதி இல்லை ” எனக் கூறியுள்ளார்.
ஆனால் ஈஸ்வரன் கேட்காமலும், கையில் இருந்த கத்தி போன்ற ஆயுதத்தை கீழே போடாமலும் இருந்துள்ளார்.

இந்த நிலையில் வனஅதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஈஸ்வரன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் அவரது உடலை தரக்கோரி கம்பம் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment