Advertisment

காதலை ஏற்க மறுத்ததால் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் - ஆந்திர இளைஞரின் வெறிச்செயல்

Horror in chengalpattu : காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, chengalpattu, one side love, andhra, youth, student, murder, police, enquiry, arrest

chennai, chengalpattu, one side love, andhra, youth, student, murder, police, enquiry, arrest, செங்கல்பட்டு, ஒருதலைக்காதல், ஒருதலைக்காதல், ஆந்திரா, இளைஞர், , மாணவி, கொலை, போலீஸ், விசாரணை, கைது

காதலை ஏற்க மறுத்த 17 வயது மாணவியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம், செங்கல்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். கட்டிட தொழிலாளியான இவர், குடும்பத்துடன் சென்னையில் வசதித்து வருகிறார். இவருடன் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தைச் சேர்ந்த துர்கா ராவ் என்ற இளைஞரும் வேலை செய்து வருகிறார்.

publive-image

ஜெயராஜ் மகள் பிரியாவை (17) துர்கா ராவ் ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார். இருவரும் ஆந்திராவில் ஒரே பள்ளியில் படித்திருக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே பிரியாவைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால், இந்தக் காதலுக்குப் பிரியா சம்மதம் தெரிவிக்கவில்லை. பள்ளிக்குச் சென்று வரும்போதெல்லாம் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். துர்காராவின் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காக ஆந்திராவிலிருந்து பட்டிபுலத்தில் உள்ள பெற்றோரிடம் வந்து தங்கினார்.

ஆனாலும், பிரியாவை தன்னுடைய வலையில் விழவைக்க வேண்டும் என்பதற்காக ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வந்தார் துர்காராவ். பிரியாவின் பெற்றோரிடம் பேசி ஜெயராஜ் வேலை செய்யும் கட்டடத்திலேயே கொத்தனார் வேலைக்குச் சேர்ந்துள்ளார். இதையடுத்து, மீண்டும் தன்னைக் காதலிக்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்துவந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கட்டட வேலை செய்துகொண்டிருந்தபோது கத்தியுடன் வந்திருந்தார் துர்காராவ். அங்கே நின்றுகொண்டிருந்த பிரியாவுடன் வாக்குவாதம் செய்தவர், கத்தியால் உடல் முழுவதும் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதைத் தொடர்ந்து மாமல்லபுரம் காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிகிச்சை பணம் முழுவதும் செலுத்தினால் மட்டுமே, உடல் தரப்படும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளதால், ஜெயராஜின் குடும்பம் மகள் இழந்த சோகம்மட்டுமல்லாது இந்த பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளது.

Chennai Murder Chengalpattu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment