Advertisment

ஆன்லைன் சூதாட்டம்.. பொள்ளாச்சியில் இளைஞர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம் விளையாடி பணம் இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Online gambling Youth suicide in Pollachi

பொள்ளாச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு வில் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ஷாஜகான். இவரது மகன் சல்மான் (வயது 22).

இவர் கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், நண்பர்களிடம் கடனாக பணப்பெற்று ஆன்லைனில் சூதாட்டம் விளையாடியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஆன்லைனில் பணத்தை இழந்ததால் அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கிணத்துக்கு போலீசார் சல்மான் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment