/tamil-ie/media/media_files/uploads/2023/07/OP-Ravindranath-kumar.jpg)
தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத்
தேனி மக்களவை அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத்துக்கு பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் புதன்கிழமை (ஜூலை 19) மாலை 5.30 மணிக்கு பாராளுமன்ற நூலக கட்டடத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை (20.07.2023) புதுடெல்லியில் தொடங்கவிருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (19.07.2023) மாலை 05:30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக தேசிய… pic.twitter.com/5ps7X8Hcg4
— P.Ravindhranath (@OPRavindhranath) July 19, 2023
இந்தக் கடிதத்தை ஓ.பி. ரவீந்திரநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் ஓ.பி. ரவீந்திரநாத்தின் தந்தை ஓ. பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் ஓ.பி. ரவீந்திரநாத் கலந்துகொள்கிறார்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் ஓ.பி ரவீந்திரநாத்தின் 2019 தேர்தல் மக்களவை வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.