Advertisment

தொடர் விபத்து எதிரொலி: கனிமவள லாரிகள் இயக்க கால நேரம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் விபத்தின் எதிரொலியாக கனிமவள லாரிகள் இயக்க கால நேரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, பிப்.20ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore: stones Smugged to Kerala 8 trucks seized Tamil News

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20.02.2024ம் தேதி முதல் கனிமவள லாரிகள் இயக்கத்திற்கு கால நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு கனிமவளங்களை எடுத்து செல்லும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 03 மணி முதல் இரவு 08 மணி வரை குமரி மாவட்டத்தில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

மேலும், லோடு இல்லாமல் இரவு 09 மணி முதல் காலை 06 மணிவரை, குமரி மாவட்டத்தினுள், மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தும் உள்ளே நுழையவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ஏற்கனவே  குமரி மாவட்டத்தில் கனிம வள லாரிகள் நுழைய கூடாது என்று மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதன் காரணமாக தற்பொழுது முழு நேர தடைவிதிக்காமல் நேரம் காலம் கொடுக்கப்பட்டு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் த.இ. தாகூர்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kanyakumari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment