பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் தொடக்கம் தான்! என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இ.பி.எஸ்: "பிரதமர் மோடி தலைமையின்கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை: தீவிரவாதிகள் புரிந்துகொள்ளும்படியான பதிலடி தரப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர்ட் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்'என்று பதிவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஆபரேஷன் சிந்தூர்” - தலைவர்கள் வரவேற்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற மாநில முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம்: ஸ்டாலின் - தலைவர்கள் கருத்து
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் துணை நிற்கிறோம்: ஸ்டாலின்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தினர். தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாரத தாய் வாழ்க. ஆபரேஷன் சிந்தூர். இது வெறும் தொடக்கம் தான்! என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும் என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்பதிவில், “பயங்கரவாதத்துக்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு துணை நிற்கிறது. நமது தேசத்திற்காக நமது ராணுவத்துடன் தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இ.பி.எஸ்: "பிரதமர் மோடி தலைமையின்கீழ் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை: தீவிரவாதிகள் புரிந்துகொள்ளும்படியான பதிலடி தரப்பட்டுள்ளது. ஜெய்ஹிந்த் என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர்ட் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விஜய்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்'என்று பதிவிட்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“ஆபரேஷன் சிந்தூர்” - தலைவர்கள் வரவேற்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் மற்ற மாநில முதலமைச்சர்களான சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்நாவிஸ் உட்பட பல்வேறு மாநில முதல்மந்திரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.