Advertisment

மீண்டும் இரட்டை குழல் துப்பாக்கிகளாக செயல்படப் போகும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்? பிரதமர் நரேந்திர மோடி வருகை சுவாரஸ்யங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியை அருகருகே நின்று வரவேற்ற ஓபிஎஸ், இபிஎஸ், வழியனுப்பியும் வைத்தனர்.

author-image
WebDesk
New Update
OPS and EPS welcomed Prime Minister Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியை ஒபிஎஸ், இபிஎஸ் ஒன்றாக வரவேற்றுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம் நிறுவனத்தின் பல்கலைக்கழக விழாவில் கலந்துகொண்டார். பெங்களூருவில் வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கிவிட்டு, மதுரை விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்தார்.

அப்போது பிரதமர் நரேந்திர மோடியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் அருகருகே நின்று பூங்கொடுத்து வரவேற்றுள்ளனர்.

அந்நிகழ்வில் கவர்னர் ஆர்.என். ரவி., முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருந்தனர்.

Advertisment

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையிலும் முன்னாள் முதலமைச்சர்களான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் ஒன்றாக வழியனுப்பி வைத்துள்ளனர்.

இது அதிமுக மட்டுமின்றி தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்கப்படும் என்றார். இதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த மெகா கூட்டணிக்கு நேசக்கரம் நீட்டுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது பிரிந்து கிடக்கும் ஒபிஎஸ், இபிஎஸ் மீண்டும் இரட்டை குழல் துப்பாக்கியாய் ஒன்றிணைந்து செயல்பட போகின்றனரா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க மட்டும் ஒன்றிணைந்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment