Advertisment

அ.தி.மு.க கட்சியின் சின்னம், கொடி தொடர்பான தீர்ப்பு: மீண்டும் சரிவை சந்தித்த ஓ.பி.எஸ்

அ.தி.மு.க கட்சி பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் தரப்பு பயன்படுத்த தனி நீதிபதி விதித்த இடைகால தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அ.தி.மு.க கட்சி பெயர், கொடி உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் தரப்பு பயன்படுத்த தனி நீதிபதி விதித்த இடைகால தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.

Advertisment

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ் கட்சியின் கொடி, லெட்டர் பேர்டு, சின்னம், பெயர் பயன்படுத்துவது தொடண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பதை ஏற்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.  

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கட்சியின் சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ. பன்னீர்செல்வதுக்கு இடைக்காலத் தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல் முறையீடு மனு மீது நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.  இரு தரப்பு வாதங்களும் நவம்பர் 16ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் அதிமுக கொடி சின்னம்  ஆகியவற்றை  பயன்படுத்த ஓ.பி.எஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலை தடையை நீக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். தனிநீதிபதியிடம் மீண்டும் முறையிட அறிவுறுத்தினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment