Advertisment

அ.தி.மு.க கொடி, பெயர், சின்னம் பயன்படுத்த மாட்டேன்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ் உத்தரவாதம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அ.தி.மு.க கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேடு உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட மாட்டாது என ஓ.பி.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ops89

அ.தி.மு.க கொடி, பெயர், சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில் அ.தி.மு.க கொடி, பெயர், சின்னம் பயன்படுத்தப்பட மாட்டாது  ஓ.பி.எஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்ததையடுத்து பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி  பொதுச் செயலாளராகத் பதவியேற்றார். ஓ.பி.எஸ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்நிலையில்,  எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம்  அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

இதையடுத்து தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர். 

 இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று (நவ.30) விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன்,  “மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என்றார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், “வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றால் பதில் மனுவை தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் அல்லது வழக்கை ஒத்தி வைப்பதாக இருந்தால் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, “தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்த மாட்டோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Paneerselvam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment