அ.தி.மு.க பெயர், கொடி, சின்னம்- ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்கால தடை: நீதிமன்றம் உத்தரவு

அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ops89

அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேடு போன்றவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

அதிமுக பெயர், கொடி, மற்றும் சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடை கோரி எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “ அதிமுக பொதுச்செயலாளர் என என்னை  உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையில் ஓ.பி.எஸ்  என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறி வருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருவதால், தொண்டர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இதனால் அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓ.பி.எஸ் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவசாகம் வேண்டும் என்று ஓ.பி.எஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.

Advertisment
Advertisements

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்-க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: