ஓ.பி.எஸ் மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றத்தில் 30-ம் தேதி விசாரணை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற இருநீதிபதிகள் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

author-image
WebDesk
New Update
EPS OPS

அதிமுகவில் நிலவும் பிரச்சனைகளுக்கு இந்த முறை முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஒன்றை தலைமை பிரச்சனை வெடித்தது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மட்டும் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது.

Advertisment

அந்த பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அதிமுகவில் ஜுன் 23-க்கு முன்பிருந்த நிலை நீடிக்க வேண்டும். மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் பொதுக்குழு கூட்ட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு முன்பு செப்.2ஆம் தேதி விசாரிக்கப்பட்டது. இதில், தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

Advertisment
Advertisements

தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பார்க்கப்பட்ட நிலையில், இரு நீதிபதிகள் தீர்ப்பு இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக வந்தது. இந்தநிலையில், இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவானது வரும் செப்டம்பர் 30ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. பொதுக்குழு வழக்கில் இபிஎஸ் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட உள்ளன. ஒன்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் என மாறிமாறி நீதிமன்றத்தை நாடிய நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூலம் இவ்விவகாரத்திற்கு முடிவு கிடைக்குமா என அதிமுகவினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: