"எல்லாம் நன்மைக்கே"...அமித்ஷா-இ.பி.எஸ் சந்திப்பு குறித்து ஓ.பி.எஸ் கமெண்ட்

அமித்ஷா-இ.பி.எஸ் சந்திப்பு குறித்த செய்தியாளர் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ. பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார்.

அமித்ஷா-இ.பி.எஸ் சந்திப்பு குறித்த செய்தியாளர் கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என ஓ. பன்னீர் செல்வம் பதில் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
OPS

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குழு டெல்லியில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றிய கேள்விக்கு "எல்லாம் நன்மைக்கே" என ஒற்றை வரியில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார். 

Advertisment

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.

ஆனால் எடப்பாடி பழ்னிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்கவே மாட்டோம் என தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவுடன்  தனியாக  ஆலோசனை நடத்தினார். இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.  

இந்த நிலையில் அமித்ஷாவுடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "எல்லாம் நன்மைக்கே" என்று மட்டும் கருத்து சொல்லி இருக்கிறார். 

Ops Eps Ops

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: