கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாடு; தி.மு.க.வுக்கு ஓ.பி.எஸ் கண்டனம்

சென்னையில் கஞ்சா வியாபாரி ஒருவர் தன்னை கைது செய்ய சென்ற 2 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டிய முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கஞ்சா வியாபாரி ஒருவர் தன்னை கைது செய்ய சென்ற 2 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை சுட்டிக் காட்டிய முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
OPS In Assembly

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

சென்னையில் கஞ்சா வியாபாரி ஒருவர் தன்னை கைது செய்ய சென்ற 2 காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை மேற்கோள் காட்டி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
இது குறித்து பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மாநிலத்தில் வன்முறை, அட்டூழியங்கள், பயங்கரவாதம் அதிகரித்து வருகிறது.

Advertisment

தற்போது, போதைப்பொருள் அச்சுறுத்தல் பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் ஏராளமாக மாநிலத்தில் நடைபெறுகின்றன.
.
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளக்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர்கள் சிலர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தினர்.

சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வியாபாரி காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தச் சம்பவங்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதைக் காட்டுகிறது. மாநிலத்தில் இளைஞர்கள் நலனில் திமுகவுக்கு உண்மையாக அக்கறை இருந்தால், மாநிலத்தில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவிலான சமூகங்களை அமைக்க வேண்டும்” என்றார்.

Advertisment
Advertisements

இதற்கிடையில், “சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா மற்றும் இதர போதைப்பொருட்கள் கிடைக்கிறது. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று டி.டி.வி தினகரன் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், “போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

O Panneerselvam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: