scorecardresearch

2-வது தர்மயுத்தம் தொடக்கம்… அவரின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை; ஓ.பி.எஸ் பேச்சு

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் பேச்சு

2-வது தர்மயுத்தம் தொடக்கம்… அவரின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை; ஓ.பி.எஸ் பேச்சு
ஓ.பி.எஸ் தரப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் (புகைப்படம்: ட்விட்டர்/ ஓ.பன்னீர்செல்வம்)

அ.தி.மு.க சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அ.தி.மு.க பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தேர்வு செய்ய முடியாது என நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பி.எஸ். அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்தக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் 87 மாவட்ட செயலாளர்கள், 176 ஆதரவு நிர்வாகிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்: தமிழர்கள் எங்கள் திறமையை அடையாளம் காணவில்லை; மத்திய அரசு ஆளுநர் ஆக்கியுள்ளது; தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ”அ.தி.மு.க.,வை தொண்டர்களுக்கான இயக்கமாக எம்.ஜி.ஆர் உருவாக்கினார். அ.தி.மு.க.,வின் தலைமைப் பொறுப்பை ஏற்பவர்கள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். இதன்படி தான் ஜெயலலிதா மறைந்த பின்பு தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த சட்ட விதியை சிதைக்கும் அளவுக்கு 23 ஆம் தேதி பொதுக் குழு நடைபெற்றது. அதில் சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு சென்று 23 தீர்மானங்களையும் ரத்து செய்து அறிவிப்பு செய்யப்பட்டது.

அ.தி.மு.க.,வின் இந்த நிலைக்கு யார் காரணம் என்பது உங்களுக்கு தெரியும்; அவரது பெயரை நான் உச்சரிக்க மாட்டேன். தன் இரும்பு பிடிக்குள் கட்சியை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நடத்திய நாடகம் தோல்வியில் முடிந்தது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவாக்கிய சட்ட விதியை காப்பாற்ற இரண்டாவது தர்மயுத்தம் துவங்கியுள்ளது. எதற்கும் அஞ்சாமல் துணிந்து நில்லுங்கள். முன்வரிசையில் நாங்கள் நின்று, வரவிருக்கும் கணைகளை தாங்கி உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்போம்.

வேட்புமனுவை வாபஸ் பெற்று இரட்டை இலை வெற்றி பெற ஆதரவாக இருப்போம் என சொன்னோம். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. மக்கள் தீர்ப்பு எனும் மகேசன் தீர்ப்பு இருக்கிறது, அது கூடிய விரைவில் வரும். வாக்கு எண்ணிக்கையின் போதும் அது தெரியும்.

அ.தி.மு.க சட்டவிதியை எந்தளவுக்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு சிதைத்துள்ளனர். அ.தி.மு.க பொதுச்செயலாளரை மாவட்ட செயலாளர்களும், எம்.எல்.ஏ.,க்களும் தேர்வு செய்ய முடியாது.” இவ்வாறு ஓ.பி.எஸ் பேசினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Ops says second dharma yutha starts to recover admk