Advertisment

இ.பி.எஸ்-ஐ ஒதுக்கிவிட்டு அனைவரும் ஒன்று சேர்வோம்: வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி

எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைவார் என்று ஒபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
இ.பி.எஸ்-ஐ ஒதுக்கிவிட்டு அனைவரும் ஒன்று சேர்வோம்: வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி

எடப்பாடி பழனிசாமி எங்களுடன் இணைவார் என்று ஒபிஎஸ் தரப்பைச் சேர்ந்தவரான வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் வைத்தியலிங்கம் பேசியதாவாது : ”அம்மா சொன்னதுபோல் அதிமுக ஆட்சிக்கு வரும். இப்போது பிரிந்திருக்கும் டிடிவி, சசிகலா,எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒன்றாக இணைவார்கள். அப்படி இபிஎஸ் இணையவில்லை என்றால் அவரை தவிர்த்துவிட்டு ஆட்சி அமைப்போம். பாஜக எந்த பிரச்சனையும் செய்யவில்லை. ரைடுகள் காங்கிரஸ் காலத்திலிருந்து  நடத்தப்படுகிறது. கோவை செல்வராஜ் வெளியே செல்லவில்லை. அவர் எங்களைவிட்டு போகமாட்டார். ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். 2024-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-தான். திமுகவுடன் யாரும் கூட்டணி வைத்துகொள்ளவில்லை. மக்கள் மனதில் இருப்பது அதிமுக-தான். அதுதான் வலுவான எதிர்கட்சி” என்று அவர் கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment