Advertisment

கார்த்திகை தீபம் ஏற்றுவது யார்? ஓ.பி.எஸ் மகனுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு; வாக்குவாதம்

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் மகனுக்கும், திமுகவினருக்கு நடைபெற்ற சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
கார்த்திகை தீபம் ஏற்றுவது யார்? ஓ.பி.எஸ் மகனுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு; வாக்குவாதம்

கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது  என்பதில் ஓபிஎஸ் மகனுக்கும்,  திமுகவினருக்கு நடைபெற்ற சண்டை பரபரப்பை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே  உள்ள கைலாசபட்டி பகுதியில் உள்ளது  கைலாசநாதர் கோவில். இந்த கோவிலை கடந்த 2002-ம்  ஆண்டு முதல் ஓபிஎஸ் குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இருப்பதால், இங்கு ஓபிஎஸ் குடும்பத்தினருக்கு தனி மரியாதை செய்ய கூடது என்று தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் மனு அளித்தார்.

இந்நிலையில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்படும்போது, ஓபிஎஸ் மகன் ஜெயப்பிரதீப்புக்கு தனி மரியாதை செலுத்தப்பட்டது.இந்நிலையில் அவர் கார்த்திகை தீபம் ஏற்றுவார் என்று கூறப்பட்டதால், தங்க தமிழ்செல்வன் தரப்பு இதை எதீர்த்தது. இதனால் வாக்குவாதம், தள்ளுமுள்ளு வரை அது சென்றது. இந்நிலையில் தங்க தமிழ்ச்செலவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கோவமாக கிளிப்பிச் சென்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment