Advertisment

13 மாவட்டங்களில் மழை; இந்த 3 இடங்களுக்கு இன்று 'ஆரஞ்சு அலர்ட்': விரைந்தது பேரிடர் மீட்புக்குழு

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு இன்று கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore receives summer rain Tamil News
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழகம் முழுவதும் கோடை மழை தொடங்கி பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.  இந்நிலையில், இன்று (மே 18) தமிழகத்தில்  3 மாவட்டங்களில் தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வரும் 21-ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.

தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை குழுவின் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 90 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் சென்னையில் இருந்து நெல்லை சென்றுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

tamilnadu rain
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment