தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று 115.6 மி.மீமுதல் 204.4 மி.மீ வரை மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுகல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நாளைய தினத்தில் தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் வரும் 24 மற்றும் 25ம் தேதிகளில் தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான விடுக்கப்பட்ட மிக கனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
” தமிழ்நாட்டில் தென்தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதுபோல கன்னியாகுமாரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. நாளை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“