Cauvery water to Tamil Nadu: காவிரி ஆற்றில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கக் கோரி தமிழக விவசாயிகள் கோரிக்கைகள் வைத்தனர். இந்த நிலையில் காவிரியில் நீர் திறக்க கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
கடந்த மாதம் கன்னட அமைப்புகள் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். இந்த நிலையில் மாநில அரசும் இந்தப் போராட்டங்கள் மற்றும் நீர் பற்றாக்குறையை காரணமாக காட்டி நீர் திறக்க மறுத்துவிட்டது.
எனினும் காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக அரசு மறுத்த நிலையில், நீர் 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
இதற்கும் கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க பரிந்துரைத்துள்ளது. இதனடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“