’சட்டத்தை உருவாக்கிய மேதைக்கே நீதிமன்றத்தில் இடமில்லையா? சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று கூறும் சுற்றரிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று கூறும் சுற்றரிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில்  அம்பேத்கர் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று கூறும் சுற்றரிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.  

Advertisment

நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை தவிர மற்ற தலைவர்கள் உருவப்படங்களை வைக்கக்  கூடது என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட நீதிமன்றங்களுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

டாக்டர் அம்பேர்கர் மற்றும் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் சங்கங்களின் மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோரின் உருவப்படங்களைத் திறக்க அனுமதி கோரி பல்வேறு வழக்கறிஞர் சங்கங்களிடமிருந்து  பெறப்பட்ட கோரிக்கைகளை  நிராகரித்து, கடந்த ஏப்ரல் 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற  தலைமை பதிவாளர் எம். ஜோதிராமன் சுற்றிக்கை அனுப்பினார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்ட நீதித்துறை தலைவர்களும் அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கண்டிப்பாக கடைபிடிக்க  வேண்டும் என்றும், அதை மீறுவோர் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படம் என்று குறிப்பிட்டிருந்தது.

Advertisment
Advertisements

இந்நிலையில் இந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த உத்தரவால் அதிர்ச்சியடைவதாகவும், சட்டத்தை எழுதிய  மேதைக்கே நீதிமன்றத்தில் இடமில்லையா? “ என்ற முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: