சிறுநீரக தானம்! நட்பை எப்படி ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முடியும்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

மதுரை சந்தாவூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கணேசன் முன்வந்தார்.

மதுரை சந்தாவூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கணேசன் முன்வந்தார்.

author-image
WebDesk
New Update
chennai high court 2x

Tamilnadu

சிறுநீரக பாதிப்பால் உயிருக்குப் போராடியவருக்கு, அவரது நண்பர் சிறுநீரக தானம் செய்ய முன்வந்த வழக்கில், "நட்பை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது; அது உணர்வுகளின் அடிப்படையிலான உறவு" என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisment

மதுரை சந்தாவூரைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் சிறுநீரக பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிறுநீரகம் தானம் செய்ய, ஈரோட்டைச் சேர்ந்த அவரது நண்பர் கணேசன் முன்வந்தார். இதையடுத்து, இருவரும் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்கான குழுவிடம் (Authorization Committee) அனுமதி கோரி விண்ணப்பித்தனர்.

ஆனால், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கையில், "கணேசனும் பெரியசாமியும் குடும்ப நண்பர்கள் என்பதை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், உடல் உறுப்பு மாற்று குழு, சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, சிறுநீரகம் பெற இருந்த பெரியசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதிகாரிகளின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்தார்.

Advertisment
Advertisements

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது உத்தரவில், "நட்பை எப்படி ஆவண ஆதாரங்களால் நிரூபிக்க முடியும்? நட்பு என்பது உணர்வுகளின் அடிப்படையிலான உறவு. அதை ஆவணங்கள் தீர்மானிக்க முடியாது" என்று அழுத்தமாக தெரிவித்தார்.

உறவினர்கள் அல்லாதவர்கள் உடல் உறுப்பு தானம் செய்வதை சட்டம் தடை செய்யவில்லை. மாறாக, அன்பின் அடிப்படையிலும் பாசத்தின் அடிப்படையிலும் மட்டுமே இந்த தானம் நடைபெற வேண்டும் என்பதே சட்டத்தின் நோக்கம். உடல் உறுப்பு தானத்தில் பணப் பரிவர்த்தனைகள் அல்லது அழுத்தங்கள் இருக்கக்கூடாது என்பதை மட்டுமே சட்டம் வலியுறுத்துகிறது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதையடுத்து, அனுமதி மறுத்த உடல் உறுப்பு மாற்று குழுவின் உத்தரவை நீதிபதி ரத்து செய்தார். அத்துடன், பெரியசாமி மற்றும் கணேசன் இருவரும் தங்கள் குடும்பத்தினருடன் நாளை குழுவின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நான்கு வாரங்களுக்குள், அவர்களின் விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலனை செய்து, சட்டப்படி இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: