Advertisment

ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை சி.பி.சி.ஐ.டி போலிசார், அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்ற கொடநாடு பங்களாவை சி.பி.சி.ஐ.டி போலிசார், அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய நீலகிரி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை 10 பேரை கைது செய்தது.

அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு பங்களாவில் நீதிபதி நேரில் சென்று ஆய்வு  செய்ய வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்தல் காதர், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி அளித்தார்.

சி.பி.சி.ஐ.டி போலிசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின்வாரியத்துறை அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தயடங்களை அழிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆய்வு செய்வதை முழுவதுமாக வீடியோ எடுத்து நீதிதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment