குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு? கோவை மேயர் மீது அ.தி.மு.க கவுன்சிலர்கள் புகார்

கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் ரூ.170 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

கோவை மாநகராட்சியில் குப்பைகளை எடுக்க டெண்டர் வழங்கியதில் ரூ.170 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அ.தி.மு.க கவுன்சிலர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore

கோவை மாநகராட்சி கூட்டம் விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா தலைமையில் இன்று (ஜூலை 31) நடைபெற்றது. முன்னதாக இந்த கூட்டத்திற்கு வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் பிரபாகரன், சர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி கவுன்சிலர்களின் அனுமதி பெறாமல் 170 கோடி ரூபாய் பணத்தை கையாள்வதற்கான அனுமதியை தனியாருக்கு மேயர் கல்பனா அளித்து இருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையில் பதாகையுடன் மன்ற அரங்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Advertisment

அப்போது கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கு தனியாருக்கு டெண்டர் விடுவது தொடர்பாக அனுமதி கோரப்பட்ட போது, இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தி.மு.க, அ.தி.மு.க என கவுன்சிலர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மாதம் மீண்டும் இந்த பொருள் சபைக்கு வருகிறது எனவும், இந்த டெண்டர் கூட்டத்தின் அனுமதி பெறாமல் ரூ.170 கோடி பணம் தனியாருக்கு தாரைவார்கப்பட்டுள்ளது எனவும் கூறினர். மேலும் மேயர் தனக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது என்றே தெரியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

அவசர காலத்தில் டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியலுக்காக நாங்கள் இதனை பேசவில்லை இந்த விவகாரத்தில் எத்தனை கோடி கைமாறியது என தெரியவில்லை எனவும் கூறினர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினர். கூட்டம் துவங்கும் முன்பாகவே அதிமுக கவுன்சிலர்களின் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

செய்தி: பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: