Advertisment

ராதாகிருஷ்ணன், அமுதா... 15 முக்கிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 10 கலெக்டர்கள் அதிரடி மாற்றம்

தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
P Amudha J Radhakrishnan including 15 IAS Officers and 10 dist collectors Transferred in TN Tamil News

10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை மாநகர ஆணையராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisment

பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மாற்றம்

சிட்கோ இயக்குநர் மதுமதி ஐ.ஏ.எஸ் பள்ளிக் கல்வித் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை செயலாளராக இருந்த குமர குருபரன் சென்னை மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

அதேபோல தகவல் தொழிநுட்பத் துறைச் செயலாளராக குமார் ஜெயந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம், ராணிப்பேட்டை, அரியலூர் ஆட்சியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தின்போது ஆட்சியராக இருந்த ஷர்வன் குமார் ஜடாவத், நகர்ப்புற மேம்பாட்டு வாரிய இணை செயலாலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் இட மாற்றம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவைகள் துறை இயக்குநராக இருந்த சந்திரலேகா ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி ஆட்சியர் அருணா ஐஏஎஸ், புதுக்கோட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமி பவ்யா ஐஏஎஸ் தன்னீரு நீலகிரி ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் ஆட்சியராக பிரியங்கா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐ.ஏ.எஸ் அரியலூர் ஆட்சியராக ரத்தினசாமி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் ஆட்சியராக சி.பி ஆதித்ய செந்தில் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அழகுமீனா ஐ.ஏ.ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் லால்ரிண்டிகி பச்சாவ் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக சிம்ரன் ஜீத் சிங் கலோன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment