Advertisment

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்த அ.தி.மு.க; மேல் இடத்தில் இருந்து உத்தரவு வந்ததா? ப.சிதம்பரம் கேள்வி

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க முடிவிற்கு மேலிடத்தின் அறிவுறுத்தல்களே காரணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் சமூக வலைதள பதிவில் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Chidambaram

ப. சிதம்பரம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாய்ப்பை எளிதாக்கும் வகையில் இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

“அ.தி.மு.க-வின் மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தல்களைப் பெற்றுள்ளது என்பதற்கு இந்த முடிவு தெளிவான சான்றாகும். பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் பினாமி மூலம் சண்டையிட்டு வருகின்றன. தி.மு.க வேட்பாளரின் அமோக வெற்றியை இந்தியா கூட்டணி உறுதி செய்ய வேண்டும்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த புகழேந்தி உடல்நலக் குறைவால் மறைந்ததைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று கூறுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் சி. அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி தேர்தலில் வலுவாக உள்ளது.

இந்த சூழ்நிலையில், பா.ஜ.க-வின் முன்னாள் கூட்டணி கட்சியான அ.தி.மு.க, இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை அறிவித்தது. இந்த இடைத் தேர்தல் சுதந்திரமான முறையில் நியாயமான முறையில் நடைபெறாது என்று கூறியுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தனது  எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு என்.டி.ஏ வேட்பாளரின் (பா.ம.க.,) தேர்தல் வாய்ப்பை எளிதாக்கும் வகையில், மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு, தெளிவான சான்று.

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் பினாமி (பா.ம.க ) மூலம் போட்டியிடுகின்றன.

இந்தியா கூட்டணி தி.மு.க வேட்பாளர் அமோக வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில், இந்தியா கூட்டணி தமிழகத்தில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க 22 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் புதுச்சேரியில் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. புதுச்சேரியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வி. வைத்திலிங்கம் பா.ஜ.க-வின் ஏ. நமச்சிவாயத்தை தோற்கடித்தார்.

அ.தி.மு.க விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்தது குறித்து பா.ஜ.க-வின் மாநில துணைத் தலைவர் திப்பதி நாராயணன் ஊடகங்களில் குறிப்பிடுகையில், “அ.தி.மு.க-வை மூன்றாவது இடத்துக்கு பா.ஜ.க தள்ளியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாங்கள் மிகவும் வலிமையானவர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்த இடைத் தேர்தலில் தாங்கள் அம்பலமாகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள். எதிர்க்கட்சி என்ற முறையில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். அரசியலில் போராட வேண்டும். அ.தி.மு.க போட்டியிடும் விருப்பத்தை இழந்துவிட்டீர்கள் என்பது தெளிவாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment