/tamil-ie/media/media_files/uploads/2017/11/pa-ranjith.jpg)
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு தமிழ்நாடு அரசின் அலட்சியமே காரணம் என பா. ரஞ்சித் கூறியுள்ளார்.
Kallakurichi | Pa Ranjith |கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து இயக்குனர் பா. ரஞ்சித், “தமிழ்நாடு அரசு காவல்துறையின் அலட்சியப் போக்கு காரணமாகவே கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை. சமீபகாலமாக போதைப் பொருளுக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி அதிகரித்து காணப்படுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் வேதனை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கள்ளக்குறிச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்தது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த சம்பவம் குறித்து ரவி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.